Educational And Employment News

ஜூலை 16, 2023

நாளை(17.7.23) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!

 

இந்த மாவட்டத்தில் நாளை மறுநாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு எதற்காக தெரியுமா..?

ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோவில் தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். அப்படிப்பட்ட பொன்னியத்தலமான அந்த ராமநாத சுவாமி ஆலயத்தில் நடைபெறும் ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் அந்த மாவட்ட மக்களுக்கு அது கொண்டாட்டமாக தான் இருக்கும்.

அந்த விதத்தில், ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுமுறை வழங்கப்படும் என்று அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்திருக்கிறார். 17ஆம் தேதி வழங்கப்படும் விடுமுறையை வீடு செய்யும் விதத்தில் வரும் 22ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

அதோடு ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த பலர் ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வர இருக்கிறார்கள். என்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாணவ, மாணவிகள் நலனை மனதில் வைத்து விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template