![]() |
மருத்துவப் படிப்பு சேர்க்கை... ஜூலை 16-ல் தரவரிசைப் பட்டியல்... ஜூலை 22 கலந்தாய்வு...
தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு 40,193 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
கடந்தாண்டு 36,206 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.
மருத்துவப்படிப்பிற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல்
ஜூலை 16 ந் தேதி வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அகில இந்திய
ஒதுக்கீட்டிற்கான முதல் சுற்று கலந்தாய்வை மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு
ஜூலை 20 ந் தேதி முதல் ஆகஸ்ட் 6 ந் தேதி வரையில் நடத்துகிறது.
இந்த நிலையில் தேசிய மாணவர் சேர்க்கைக் குழுவின் வழிகாட்டுதல்படி ஜூலை 22-ம் தேதி முதல் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் நடத்தப்பட உள்ளது.
நடப்பாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கு போதுமான அளவில் கால அவகாசம் இல்லாததால், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் நாட்களிலேயே தமிழ்நாட்டில் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் தேசிய மாணவர் சேர்க்கைக் குழுவின் வழிகாட்டுதல்படி ஜூலை 22-ம் தேதி முதல் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் நடத்தப்பட உள்ளது.
நடப்பாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கு போதுமான அளவில் கால அவகாசம் இல்லாததால், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் நாட்களிலேயே தமிழ்நாட்டில் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இணையம் வாயிலாகவும் கலந்தாய்வு நடைபெறுகிறது. மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கை மையங்கள் வாயிலாகவும் வீட்டிலிருந்தும் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். தமிழகத்தில் 36 மருத்துவக் கல்லூரிகளில் 5,050 இடங்களும், கே கே நகர் இஎஸ் ஐ மருத்துவக் கல்லூரியில் 150 இடங்கள் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 இடங்கள் உள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக